செய்திகள் :

ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை கட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக மாநில காவல்துறை டிஜிபி அநுராக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கூறியதாவது: பொக்காரோ மாவட்டம் லால்பானியா பகுதியில் சிஆர்பிஎஃப் படை யின் கோப்ரா கமாண்டோ படையினர், மாநில காவல்துறையினர் இணைந்து நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது லுகு குன்றுகளில் இருந்த நக்ஸல்கள், கோப்ரா படையினர் மற்றும் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நக்ஸல்களில் விவேக் என்பவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி, அரவிந்த் யாதவ் என்பவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 லட்சம், சாஹேப்ராம் மாஜி என்பவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, மூன்று ஐஎன்எஸ் ஏஎஸ் துப்பாக்கி. 8 நாட்டுத் துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது நடைபெற்ற நக்ஸல்கள் என்கவுன்ட்டர் மூலம், பொக்காரோ உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய வடக்கு சோட்டா நாக்பூர் மண்டலத்தில் நக்ஸல்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க