செய்திகள் :

ஜார்க்கண்ட்: என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக்கொலை

post image

ஜார்க்கண்டின் லதேஹரில் போலீஸார் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து பலமு டிஐஜி ஒய்.எஸ்.ரமேஷ் கூறுகையில், "மாவோயிஸ்ட் மணீஷ் யாதவ் தனது படையினருடன் காட்டில் காணப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, போலீஸ் குழு அமைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புப் படையினரைக் கண்டவுடன் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் மணீஷ் யாதவ் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன. என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மணீஷ் யாதவ் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு! மின் பற்றாக்குறையை சரிசெய்யுமா?

இதற்கிடையில், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மற்றொரு தேடப்படும் மாவோயிஸ்ட் குந்தர் கெர்வார் என்கவுன்டர் இடத்தில் கைது செய்யப்பட்டார் என்றார். லதேஹரில் உள்ள மஹுவாதன்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரம்காட் மற்றும் டவுனா காடுகளில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்கவுன்டருக்குப் பிந்தைய தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ஒரு மாவோயிஸ்ட்டின் உடல் மீட்கப்பட்டு பின்னர் மணீஷ் யாதவ் என அடையாளம் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய என்கவுன்டர் திங்கள் காலை வரை தொடர்ந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காடுகளில் மறைந்திருப்பதாக நம்பப்படும் மற்ற மாவோயிஸ்ட்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க