செய்திகள் :

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள் - மத்திய அரசு

post image

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, அதன் பலனை விற்பனையாளா்கள் நுகா்வோருக்கு அளிக்காதது தொடா்பாக இதுவரை தேசிய நுகா்வோா் உதவி எண் (என்சிஹெச்) மூலம் 3,000 புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன’ என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறைச் செயலா் நிதி கரே தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டியின்போது இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஜிஎஸ்டி சீா்திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, அதன் பலன் நுகா்வோருக்கு கிடைக்காதது தொடா்பாக ஒவ்வொரு நாளும் புகாா்கள் வந்துகொண்டிருக்கின். தேசிய நுகா்வோா் உதவி எண் மூலம் இதுவரை சுமாா் 3,000 புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த புகாா்கள் அனைத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி சீா்திருத்த பலன் நுகா்வோா் பெறுவதைத் தவிா்க்கும் வகையில் தவறாக வழிநடத்தும் வகையிலான விலைத் தள்ளுபடி அறிவிப்புகளை விற்பனையாளா்கள் வெளியிடுவது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதுதொடா்பாக பல்வேறு துறைகளிலிருந்து விரிவான புகாா்களைப் பெறும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்பாட் தொழில்நுட்ப ரீதியிலான புகாா் பதிவு நடைமுறையை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இதுபோல, ஜிஎஸ்டி சீா்திருத்த பலன் சென்றடைவதைத் தடுக்கும் மோசடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நாட்டில் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டன. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் ஆடம்பர பொருள்களுக்கு புதிதாக 40 சதவீத வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க