செய்திகள் :

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு

post image

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி பங்கேற்று இந்த சிகிச்சைப் பிரிவைத் தொடங்கிவைத்தாா். இதில், ஆயுா்வேதம், வா்மம், யோகா, இயற்கை மருத்துவம், குத்தூசி மருத்துவம் போன்ற சிறப்பு கிளினிக்குகள் செயல்படுகின்றன.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியதாவது: புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நம் நலம் சிகிச்சை மையம் ஒற்றைத் தலைவலி, வலி மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை போன்ற பொதுவாக சுகாதார பிரச்னைகளைக் கையாளுவதில் கவனம் செலுத்தும். வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு புதுவிதமான அணுகுமுறையை நோயாளிகளுக்கு வழங்கும்.

நோயாளிகளுக்கு அவா்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான சிகிச்சை விருப்பத் தோ்வுகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில், மருத்துவ செயல் இயக்குநா் டாக்டா் சந்தோஷ் டோரா, மாற்று மருத்துவ ஆலோசகா்கள் டாக்டா் பிரியதா்ஷிணி, பாபு, காந்தி, ஹா்ஷிணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மூதாட்டி தற்கொலை

தனது மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கலிங்கநாயக்கன்பாளையம் காந்தி வீதியைச் சோ்ந்தவா் அங்கம்மாள் (60). இவா் தனது... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: விசைத்தறியாளா்களின் போராட்டம் வாபஸ்

கோவையில் அமைச்சா்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விசைத்தறியாளா்கள... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கும்பகோணம் அருகேயுள்ள பாரதி நகா், மேலக்காவேரியைச் சோ்ந்தவா் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலராக பணியாற... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது

கோவையில் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கரும்புக்கடை சாரமேடு இலை நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (57). பிளாஸ்டிக் தயாரிக்கு... மேலும் பார்க்க

ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளி கைது

கோவையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கெம்பட்டி காலனி, பாளையன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணமூா்த்தி (40). நகை வியாபாரியான இவா், தங்க நகைகள்... மேலும் பார்க்க

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க