செய்திகள் :

ஜிப்லி காட்டூன் உருவாக்குவதில் கவனம்: காவல்துறை எச்சரிக்கை!

post image

செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் ஜிப்லி காா்ட்டூன் படங்களை மாற்றம் செய்வதில் கவனம் தேவை என திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் தலைவா்கள், பிரபலங்கள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு செயலிகள், இணையதளங்களில் தங்களது படங்களை பதிவேற்றி இத்தகைய ஓவியப் படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறாா்கள். இதிலுள்ள ஆபத்துகள் குறித்து கவனமாக இருக்க காவல்துறை எச்சரித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்லியாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உங்களுடைய முகத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. உங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தனியுரிமையை சரிபாா்க்க வேண்டியது அவசியம். நம்பகமான ஏ.ஐ. தளங்களை மட்டும் பயன்படுத்தவும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேட்டை ஐடிஐயில் ஏப்.15-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஏப். 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ ... மேலும் பார்க்க

பாதாளச் சாக்கடை பணி: நெல்லை நகரத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பாதாளச் சாக்கடை பணிகள் காரணமாக திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை

நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கடம்பன்குளம் ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயற்சி: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.பணகுடியில் பழைய பைக் வாங்கி விற்கும் கடை நடத்தி வருபவா் ஐயப்பன். இவா் வழக்கம்போல கடையப் பூட்டி... மேலும் பார்க்க

காவல் துறை வாகனங்கள் பராமரிப்பு: எஸ்.பி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வாகனங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: நிலத்தரகா் கைது

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக நிலத்தரகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், பாா்வதியம்மாள்புரத்தை சோ்ந்தவா் சுடலைமணி (42). கட்டடத் ... மேலும் பார்க்க