செய்திகள் :

ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

post image

அண்மை நாள்களாக, ஜிப்லி செய்யறிவு கலை மூலம் தங்களது புகைப்படங்களை மாற்றி அந்த ஜிப்லி புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், நிச்சயமாக ஜிப்லி புகைப்படங்கள் வேண்டுமா என்று சிந்திக்குமாறும், தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பதிவில்,

ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள்.

ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது முகங்கள், உணர்வுகள், வெளிப்புறங்கள் என அனைத்தையும் பதிவு செய்துகொள்கிறது. இதனைக் கொண்டு பயனாளரின் ஒப்புதல் இல்லாமலே, செய்யறிவுக்கு உணர்வுகள், முகப்பாவம் குறித்து பயிற்சி அளிக்கப்படலாம்.

மேலும், ஒரு புகைப்படத்தைக் கொடுத்துவிட்டால், அதனை டெலீட் செய்யும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் எடுக்கும் ஜிப்லி புகைப்படங்கள், பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களிலும் புழங்குகிறது. இதன் மூலம், ஒருவர் சைபர் குற்றவாளிகளுக்கு இரையாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில இணையதளங்களில் ஜிப்லி தொழில்நுட்பத்தை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் பதிவேற்றும் புகைப்படங்கள் டீப் ஃபேக் புகைப்படங்களாக மாற்றப்பட்டால் என்னவாகும்?

அது மட்டுமல்லாமல், ஜிப்லி தொழில்நுட்பம் என்று வரும் மோசடியாளர்களின் லிங்குகளை கிளிக் செய்து ஏமாறும் அபாயமும் இருப்பதால், கண்டிப்பாக ஜிப்லி புகைப்படம் வேண்டுமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க