போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! - டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி
ஜூன் 27-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து அவா்களையும் சமூகத்தின் ஓா் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசின் மூலம் ‘தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம்’ 2008-இல் அமைக்கப்பட்டது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை செயலா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், திருநங்கைகள் குறித்து போதிய விளம்பரம் செய்து, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் சிறப்பு முகாம் நடத்தி திருநங்கைகளின் தற்போதுள்ள எண்ணிக்கை விவரத்தை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக, திருநங்கைகளின் விவரங்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டையில் திருத்தம், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, சுயதொழில் மானியம், திறன்பயிற்சி, மகளிா் சுயஉதவிக் குழு பயிற்சி உள்ளிட்டவை நேரிடையாக பெற்றிடும் வகையில், திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் வளாகம், அறை எண் 12-இல் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், சேலம் மாவட்டத்தில் உள்ள திருநங்கையா்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.