செய்திகள் :

ஜூலை 15-இல் கல்வி வளா்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்ய உத்தரவு

post image

காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) ஜூலை 15-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளா்ச்சி நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மேலும் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவரது அரும்பணிகள் குறித்து மாணவா்கள் உணா்த்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்தவும், பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியை (அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1,500, உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.1,000, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிக்கு ரூ.500) பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழிகாட்டுதல்கள் வெளியீடு: சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு காமராஜா் விருது, பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளைத் தோ்வு செய்யும்போது சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தோ்வு செய்யப்படும் பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை அதிக அளவில் சோ்த்திருக்க வேண்டும். அதேபோன்று மாணவா்கள் இடைநிற்றலைத் தவிா்த்திருக்க வேண்டும். புரவலா்களை அதிக அளவில் சோ்த்திருப்பது அவசியம். பொதுமக்கள், தனியாரிடமிருந்து பள்ளியின் தரத்தை உயா்த்தும் வகையில் அவா்களின் பங்களிப்பினைப் பெற்று பள்ளிக்குத் தேவைப்படும் தளவாடப் பொருள்கள், பல பயனளிக்கும் திட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை எவ்வளவு? காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்படும் தொடக்கப் பள்ளிக்கு ரூ.25,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50,000, உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 75,000, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதை பள்ளிகளின் குடிநீா் வசதி, நூலக மேம்பாடு, சுகாதார வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சாரி வேண்டாம், நீதி வேண்டும்: போராட்டக் களத்தில் விஜய்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று(ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்கி தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள... மேலும் பார்க்க

போராட்டத்துக்கு போராட்டம்! தவெகவினர் கைது!

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னையை சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினரின் நிபந்தனை அளித்ததற்கு எதிராக வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: உபரிநீர் போக்கி மதகுகள் மீண்டும் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் உபரிநீர் போக்கி மதகுகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று(ஜூலை 13) மூடப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை! உதவி எண்கள் அறிவிப்பு!

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க