செய்திகள் :

ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

post image

கடந்த ஜூன் 18-ம் தேதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரெண்டபல்லா எனும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.

ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை சந்திக்கத் இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரெண்டபல்லா கிராமத்திற்கு ஜெகன் மோகன் சென்ற வழியான எதுக்குரு பைபாஸ் முழுவதும் இவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது ஜெகன் மோகன் கான்வாயின் மீது பூத்தூவ முயன்ற சிங்கையா (வயது 55) நெரிசலில் இவரது காரின் டயரில் சிக்கி உயரிழந்துள்ளார். இந்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து குண்டூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் (SP) எஸ் சதீஷ் குமார் கூறுவதாவது...

"சிங்கையாவிற்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கு உயிரிழந்தவரின் மனைவி சீலி லுர்து மேரி கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்தப் பின்னர், இந்த உயிரிழப்பு ஜெகன் மோகன் ரெட்டி காரினால் ஏற்பட்டது தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் அன்று
சம்பவத்தின் அன்று

இதன் பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி, அவரது டிரைவர் ரமணா ரெட்டி உள்ளிட்ட 6 பேரின் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின், பிரிவு 105 (உயிரிழப்பை ஏற்படுத்துதால் ஆனால் கொலை அல்ல) மற்றும் பிரிவு 49 (சம்பவத்திற்கு உதவும் அல்லது ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கை' கீழ் புகார் பதியப்பட்டுள்ளது".

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்', `மனசெல்லாம்', `பார்த்திபன் கனவு', `நண்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்: பாஜக எம்எல்ஏ-க்கு சீட் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்.. உ.பி.,யில் அதிர்ச்சி

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் குறுகிய தூரத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே ... மேலும் பார்க்க

``நீட் மதிப்பெண் குறைந்து விட்டது'' - மகளை அடித்தே கொன்ற ஆசிரியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; அவமானப்படுத்திய கும்பல்? - விபரீத முடிவெடுத்த பெண்

கேரள மாநிலம் கண்ணூர் காயலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீதா(40). இவர் கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலின்பேரில் அங்குசென்ற பினராயி காவல்நிலை... மேலும் பார்க்க

`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?

கரூர் அருகே உள்ள வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கிறது உப்பிடமங்கலம். இந்த பேரூராட்சியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நவலடி மண... மேலும் பார்க்க

மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

மும்பையின் தென்பகுதியில் உள்ள போர்ட் பகுதியிலிருந்து 28 வயது பெண் பைலட் கிழக்கு புறநகரில் உள்ள தனது வீட்டிற்கு இரவு டாக்சி ஏற்பாடு செய்து சென்று கொண்டிருந்தார்.இரவு 11 மணியாகிவிட்ட நிலையில் டாக்சி வழக... மேலும் பார்க்க