செய்திகள் :

ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு: `இந்தியாவின் அதிக எரிசக்தி தேவை புரிகிறது!' - ரூபியோ கருத்து

post image

நேற்று முன்தினம் அமெரிக்கா நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

இவர்கள் இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் ஆகியன குறித்து விவாதித்தனர்.

இந்த நிலையில், நேற்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மார்கோ ரூபியோ இந்தியா மீதான அமெரிக்காவின் வரி குறித்து பேசியுள்ளார்.

ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ
ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ

மார்கோ ரூபியோவிடம் ரஷ்யா மீது வரி விதிப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "ஐரோப்ப நாடுகளும் ரஷ்யா மீது வரி விதிப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

இப்போதும், ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து மிகப்பெரிய அளவில் எண்ணெயையும், இயற்கை எரிவாயுவையும் வாங்கி வருகிறது. இது அபத்தமானது.

ஆனால், அமெரிக்காவை இன்னும் அதிக வரிகளை விதிக்க கேட்கிறார்கள். ஆனால், ஐரோப்பாவில் பல நாடுகள் அப்படி செய்வதில்லை" என்று பதிலளித்துள்ளார்.

இந்தியா மீதான வரி

மேலும், இந்தியா மீதான வரிகள் குறித்து, "இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதுதான் இந்திய - அமெரிக்க உறவில் விரிசல் உண்டானதற்கான முக்கிய காரணம்.

இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவை இருக்கிறது என்று புரிகிறது. ஆனால், அதற்காக தள்ளுபடி விலையில், ரஷ்ய எண்ணெயை வாங்குவது ரஷ்யாவின் போருக்கு உதவுவதாக அமையும்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவும், அமெரிக்காவும் முக்கிய கூட்டாளிகள். ஆனால், எல்லாவற்றிலும் 100 சதவிகிதம் ஒத்துப்போக முடியாது.

அதுவும் குறிப்பாக எரிசக்தி விஷயத்தில், இன்னும் பல விற்பனையாளர்கள் உள்ளனர். இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.

ஆக, இந்திய - அமெரிக்க வரி பிரச்னை சரியாவதற்கான வாய்ப்பு உண்டு என்று ஹின்ட் கொடுத்திருக்கிறார் மார்கோ ரூபியோ.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க

எட்டப்ப மன்னர் பற்றி அவதூறு? "சினிமாதானே என விட்டது பின்னாளில்" - எட்டயபுர மன்னர் தலைமையில் கண்டனம்

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைக் கண்டித்தும், வரலாற்றுத் தகவல் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறு... மேலும் பார்க்க

H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன. கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்" - குஷ்பு

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகி... மேலும் பார்க்க