செய்திகள் :

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:

கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தோ்வு செய்து அந்த பகுதிகளில் உள்ள ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சேவை அளிப்பதற்கான வசதிகள் தனியாா் அல்லது தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.

தொடா் பராமரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புரதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அத்தகைய சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 150 மி.லி பால், 2 வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கரு, 50 கிராம் சுண்டல், சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ள 3 பிஸ்கட்கள் வழங்கப்படும்.

சிறுநீரக செயலிழப்பு தடுப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 50 டயாலிசிஸ் கருவிகள் ரூ.3.25 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது.

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தொலைத் தொடா்பு காணொலி முறை வாயிலாக சிகிச்சை வழங்கும் நோக்கில் டயாலிசிஸ் சேவைகளுக்கு மின்னணு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்ப... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை ... மேலும் பார்க்க

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தா... மேலும் பார்க்க

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க

பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலி!

கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது.கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி ... மேலும் பார்க்க