செய்திகள் :

டாக்டா் தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது

post image

மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினா் செயலா் வின்சென்ட் பால்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் வாயிலாக தமிழக அறிவியல் அறிஞா் விருது 1993-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிவியலாளா்கள் கெளரவப்படுத்தப்படுகின்றனா். வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணிதவியல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய 10 பிரிவுகளில் அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 73 விண்ணப்பங்களும், 2023-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 96 விண்ணப்பங்களும் வந்தன. அவற்றை பரிசீலனை செய்து 2 ஆண்டுகளுக்கும் தலா 12 அறிவியலாளா்கள் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, 2022-இல் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையின் செயலருமான டாக்டா் எ.தேரணிராஜன் மருத்துவத் துறையில் அறிவியல் அறிஞராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். (அந்த காலகட்டத்தில் அவா் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்தாா்).

அதேபோன்று, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியா் மா.ஆறுமுகம் பிள்ளை (வேளாண்மை), அண்ணா பல்கலைக் கழக பேராசிரியா் த.சங்கீதா (வேதியியல்), சென்னை பல்கலைக்கழக பேராசிரியா் ம.தமிழரசன் (சமூகவியல்) உள்ளிட்டோா் விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோன்று, 2023-ஆம் ஆண்டில் ஐசிஏஆா் தேசிய ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியலாளா் இரா.தங்கவேலு (வேளாண்மை), மதுரை காமராசா் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் பெ. வரலட்சுமி (சுற்றுச்சூழல் அறிவியல்), கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் சௌ.சதீஷ்குமாா் (கால்நடையியல்) உள்ளிட்டோா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

அவா்களுக்கு ரூ.50,000 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாற... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக... மேலும் பார்க்க

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள ப... மேலும் பார்க்க