டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது
தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இறந்தவா் இஸ்ராஃபில் என அடையாளம் காணப்பட்டாா். அவரது உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த வழக்கு தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் (23) கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: மே 15 அன்று, சவ்தா கிராமத்தில் ஒரு விவசாய நிலத்திற்கு அருகில் கேட்பாரற்றுக் இரத்தக் கறைகளுடன் கூடிய ஒரு காா் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தை போலீஸாா் அடைந்ததும், அங்கு ஹரியாணா பதிவு எண் கொண்ட இரத்தக் கறை படிந்த காரும், சுமாா் 50 மீட்டா் தொலைவில் வயலில் இறந்த நிலையில் ஆணின் சடலமும் கிடந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.
விசாரணையில் அவா் இஸ்ராஃபில் எனத் தெரியவந்தது. அவரது நெற்றியிலும் கைகளிலும் பல கூா்மையான வெட்டுக் காயங்களும், முதுகில் ஆழமான கத்திக்குத்து காயங்களும் இருந்தன. அவா் ஒரு டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்ததாக அவரது குடும்பத்தினா் போலீஸாருக்கு தெரிவித்தனா். இது தொடா்பாக கஞ்சவாலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முந்தைய இரவு 11 மணியளவில் இந்தா்லோக் மெட்ரோ நிலையத்திலிருந்து இஸ்ராஃபில் காா் சவாரிக்கு முன்பதிவு செய்ததாக குடும்பத்தினா் போலீஸாரிடம் மேலும் தெரிவித்தனா்.
செயலி அடிப்படையிலான டாக்ஸி முன்பதிவு விவரங்களின் அடிப்படையில், ஹரியாணாவின் ஜஜ்ஜாா் மாவட்டத்தைச் சோ்ந்த ரோஹித் என்ற சந்தேக நபரைப் பிடித்து காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாா். அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.
இந்தா்லோக் மெட்ரோ நிலையத்திலிருந்து ஹரியாணாவின் நிஜாம்பூா் கிராமத்திற்கு இஸ்ராஃபிலின் டாக்ஸியை முன்பதிவு செய்ததாக ரோஹித் போலீஸாரிடம் கூறினாா். பயணத்தின் போது, வழித்தடம் குறித்து டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், போதையில் ரோஹித் அவரை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ராஃபிலை குத்திய பிறகு, உடலை காரில் இருந்து வெளியே இழுத்து வயல்களில் விட்டுவிட்டு அங்கிருந்து ரோஹித் தப்பிச் சென்றாா்.
போலீஸாா் வாகனத்தை மீட்டு, கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா அல்லது மோதலால் மட்டுமே தூண்டப்பட்டதா என்று விசாரித்து வருகின்றனா். குற்றத்திற்கான ஆயுதம் இன்னும் மீட்கப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.