செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று சமமாக முடிவு!

post image

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு காரணமாக இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சமமாக முடிந்தது.

ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி எண்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அதே நேரத்தில் நிதியாண்டு 2026 முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உள்நாட்டு மேக்ரோ பொருளாதார தரவுகளிலிருந்து வரும் குறிப்புகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்ததாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.59 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.33 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.72 ஐ தொட்ட நிலையில், முடிவில் ரூ.85.40-ஆக முடிந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 30 காசுகள் குறைந்து ரூ.85.40 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: எஃப்எம்சிஜி, ஆட்டோ பங்குகள் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

வார இறுதியில் தங்கம் வாங்கலாமா? இதோ தங்கம் விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.மே 26ஆம் தேதி இந்த வாரம் தொடங்கிய போது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.71,600க்கு வ... மேலும் பார்க்க

வங்கி மோசடி வழக்குகள் குறைந்தன! ஆனால் சந்தோஷப்பட ஒன்றுமில்லை!! ஏன்?

கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நித... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க

அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராகக் குறைவு

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மாா்ச் காலாண்டில் 934 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 24.5 சதவ... மேலும் பார்க்க

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாக்க... மேலும் பார்க்க