செய்திகள் :

டிஎச்டிசி நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129

post image

நாட்டின் முன்னணி மின்துறை மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துரை நிறுவனமான டிஎச்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer

பிரிவு: Civil - 30

பிரிவு: Electrical - 25

பிரிவு: Mechanical - 20

பிரிவு: Geology & Geo Technical - 7

பிரிவு: Environment - 8

பிரிவு: Mining - 7

பிரிவு: Wind Power Projects - 2

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் Geology, Applied Geology, Geological Technology பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive

பிரிவு: Human Resource

காலியிடங்கள்: 15

தகுதி: Personnel Management, IR, Labour Welfare பிரிவில் 60 சதவிகித மதிப் பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சி யுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Social Work, HR பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Finance

காலியிடங்கள்: 15

தகுதி: சிஏ, சிஎம்ஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணம்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.3.2025

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கேன்டீனில் உதவியாளர் பணி

கோயம்புத்தூரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி வரிவசூல் ஆணையர் அலுவலகத்தில் காலியாகவுள்ள உணவக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Cantee... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ,பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Resident Engineerகா... மேலும் பார்க்க

ரப்பர் வாரியத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ரப்பர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 40 களப் பணியாளர்(Field Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அ... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 650 இளநில... மேலும் பார்க்க