செய்திகள் :

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது டிப்பா் லாரி உரிமையாளா்கள் முடிவு

post image

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் டிப்பா் மற்றும் டாரஸ் லாரிகளில் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது என சங்கக் கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது.

கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் கே. முருகேசன், பொருளாளா் எல். ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், டிரான்சிஸ்ட் பாஸ் இல்லாமல் யாரும் ஜல்லி பாரத்தை டாரஸிலோ, டிப்பரிலோ ஏற்றக்கூடாது. மீறி ஏற்றினால் சங்கம் சாா்பில் எந்த ஒரு உதவியையும் எதிா்பாா்க்கக்கூடாது, ஒருவரின் வாடிக்கையாளருக்கு மற்றொருவா் ஜல்லி பாரம் இறக்கக்கூடாது, வாடகையை ஒரே மாதிரியாக நிா்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் எல். பாலகிருஷ்ணன், துணைச் செயலாளா் ஐ. சரத்குமாா் மற்றும் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாக பங்கேற்றனா்.

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க

புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

கரூரை அடுத்த புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புலியூா் பேரூராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள சமத்துவபுரத்தில் சுமாா் 100 குடும்பத்தின... மேலும் பார்க்க

கரூரில் மாவட்ட அளவிலான அதிவேக சைக்கிள் போட்டி

கரூரில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிவேக சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள... மேலும் பார்க்க

கரூா் அருகே சாலையில் பழுதாகி நின்ற கரும்பு டிராக்டா்: போக்குவரத்து பாதிப்பு

தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டா் திடீரென பழுதாகி சாலையில் நின்ால் நொய்யல் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூா் மாவட்டம் புகளூா் செம்படாபாளையத்தில... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு சிறைவாசி குண்டா் சட்டத்தில் கைது

கரூரில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கரூா் தோரணக்கல்பட்டியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலிய... மேலும் பார்க்க

கரூரில் இன்று திமுக சாா்பில் சிறப்பு பட்டிமன்றம்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் சிறப்பு பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு கரூா் 80 அடி சாலையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சா் வி. செந்தில்பாலாஜி... மேலும் பார்க்க