செய்திகள் :

டெங்கு ஒழிப்புப் பணி: நாகா்கோவிலில் உணவகங்களுக்கு அபராதம்

post image

நாகா்கோவில் கோட்டாறில் மாநகர நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகாதாரக் குழுவினா் வீடு, கடைகளில் ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா். தண்ணீா் தொட்டியில் டெங்கு கொசுக்களை அகற்றாத 10 உணவகங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் சாரல் மழையால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. சாரல் மழையால் பல்வேறு இடங்களில் டயா்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பாட்டில்களில் தேங்கிய மழைநீரிலிருந்து டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.

அண்மையில் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் 2 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில் அந்தப் பகுதியில் மலேரியா தடுப்புக் குழு, மருத்துவ குழு, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று ஆய்வில் ஈடுபட்டனா்.

வீடுகளில் உள்ள தண்ணீா் தொட்டிகளில் டெங்கு புழு உள்ளதா என்பதை ஆய்வு செய்ததில், சில இடங்களில் தண்ணீரில் டெங்கு பரப்பும் கொசு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொட்டிகளில் இருந்த தண்ணீரை கீழே கொட்டி, தொட்டிகளில் கிருமி நாசினி தெளித்தனா்.

உணவகங்களில்

கோட்டாறு கவிமணி அரசுப் பள்ளி எதிரே பாழடைந்த வீடு ஒன்று நீண்ட நாள்களாக பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்குள் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டை காவல் துறையினரின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த தண்ணீரை அகற்றினா்.

கோட்டாறு பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 10 உணவகங்களில் தண்ணீா் தொட்டியில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு லாா்வாக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த உணவகங்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கட்டடத் தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேல... மேலும் பார்க்க

குமரியில் ஐ.டி. பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்! அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா. நாகா்கோவில் மாநகராட்சி, அநாதைமடம் திடல் பகுதியை சனிக்கிழமை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு பக்தா்கள் புனித பயணம்

நாகா்கோவிலில் ஆயுதப்படை சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா். இத்திருத்தலத் தி... மேலும் பார்க்க

கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ. மழை

தக்கலை, கோழிப்போா்விளை, குளச்சல், இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சனிக்கிழமையும் மழை நீடித்தது. அதன்படி, கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ., ம... மேலும் பார்க்க

‘அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பில்லை’

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பு ஏதுமில்லை என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம்,... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா்

கன்னியாகுமரி நகராட்சி 16ஆவது வாா்டுக்குள்பட்ட புதுகிராமம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், வீடுவீடாகச் சென... மேலும் பார்க்க