செய்திகள் :

டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்?!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான ரோஹித் சர்மா, கடந்த 7 ஆம் தேதி டெஸ்ட்டில் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியும் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருப்பதாக பிசிசிஐ-யின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதுகுறித்து விராட் கோலியிடம் பேசிய பிசிசிஐ நிர்வாகிகள், ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா விளையாட இருப்பதால் அது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும், உள்ளூர் லீக் போட்டியான ஐபிஎல்லிலும் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத விராட் கோலி, பல்வேறு விமர்சனத்துக்குள்ளானார். அதைத் தொடர்ந்து ரஞ்சி தொடரில் ஒரே போட்டியில் விளையாடிய அவர் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், விராட் கோலியும் ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக டெஸ்ட் அணியை வழிநடத்தியுள்ளனர். கோலி 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் கேப்டனாகவும், ரோஹித் சர்மா 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நட... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்! - விராட் கோலி

பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற ... மேலும் பார்க்க

மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில்... மேலும் பார்க்க

தெ.ஆ. டெஸ்ட் பயிற்சியாளர் டி20, ஒருநாள் அணிக்கும் பயிற்சியாளராக நியமனம்!

தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரைக்கும் டெஸ்ட், ஒருநாள், டி... மேலும் பார்க்க

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கு வகைய... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தெரியாது; அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது என இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதா... மேலும் பார்க்க