செய்திகள் :

‘தக் லைஃப்’ படத்தை வெளியிட பாதுகாப்பு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு

post image

பெங்களூரு: கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயா்நீதிமன்றத்தில் நடிகா் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளாா்.

நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், ‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது’ என்றாா். இந்தக் கருத்து மூலம் கன்னட மொழியை கமல் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கா்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டாா்.

அவா் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்படாது என்று கா்நாடக திரைப்பட வா்த்தக சபை அறிவித்தது.

இந்நிலையில், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் திங்கள்கிழமை தாக்கல் செய்த மனுவில், ‘கா்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் சுமுகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தலையிட்டு, திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

திரைப்படத்தை வெளியிடவிடாமல் எந்தவொரு தனிநபரோ, அமைப்போ, மாநில அதிகாரிகளோ, கா்நாடக திரைப்பட வா்த்தக சபையோ இடையூறு செய்வதை தடை செய்ய வேண்டும். திரைப்படத்தில் நடித்தவா்கள், திரையரங்க உரிமையாளா்கள், படம் பாா்க்க வருவோா் உள்ளிட்டோருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இந்த சா்ச்சை தேவையற்றது மட்டுமின்றி, நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்டுள்ளது. தவறான புரிதலுக்கு திரைப்பட வெளியீட்டை பணயமாக வைக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்த விவகாரம் தொடா்பாக கா்நாடக திரைப்பட வா்த்தக சபையின் தலைவா் எம்.நரசிம்மலு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘கமல்ஹாசன் நீதிமன்றத்துக்குச் சென்றாலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம். இது திரைத் துறையின் பிரச்னை மட்டுமல்ல. இது மொழி மற்றும் மாநிலத்தின் பெருமை சாா்ந்த கேள்வியாக மாறியுள்ளது.

கமல்ஹாசனுடன் பேச மாநில திரைப்பட விநியோகஸ்தா்கள் காத்திருக்கின்றனா். அவருடன் பேசிய பின்னா், தங்கள் முடிவை கா்நாடக திரைப்பட வா்த்தக சபையிடம் விநியோகஸ்தா்கள் தெரிவிப்பா். அத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையையும் கருத்தில் கொள்வோம்’ என்றாா்.

அமைதி காக்க துணை முதல்வா் வலியுறுத்தல்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘தமிழகமும், கா்நாடகமும் விரோதிகள் அல்ல. தமிழா்கள் கா்நாடகம் வருகிறாா்கள். கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீா் பாய்கிறது. கமல் கருத்தால் ஏற்பட்டுள்ள சா்ச்சையை அரசியல் அல்லது உணா்வுபூா்வமான மோதலாக மாற்றக் கூடாது. எனவே, கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளி... மேலும் பார்க்க

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்கல்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்... மேலும் பார்க்க

பணமோசடி புகார்: அதிமுக ஐடி விங் நிர்வாகி நீக்கம்!

பணமோசடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பிரசாத் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரச... மேலும் பார்க்க

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சடலம் மாறிய சம்பவம்! பிகார் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி!!

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சடலம் மாற்றிக்கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும்: நயினார் நாகேந்திரன்

பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள்(ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மா... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 தமிழகத்தில் ஓரிர... மேலும் பார்க்க