செய்திகள் :

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையானது.

அதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து ரூ. 72,480-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 72,000-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 9,020-க்கும் ஒரு சவரன் ரூ. 72,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியை பொறுத்தவரை 7-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,20,000-க்கும் விற்பனையாகிறது.

The price of gold jewellery in Chennai increased by Rs. 160 per sovereign on Thursday morning.

இதையும் படிக்க : பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

டிசிஎஸ் பங்குகள் 2.51% சரிவு!

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன. நிறுவனத்தின் ஜூன் முடிய உள்ள காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்குக... மேலும் பார்க்க

க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!

புது தில்லி: புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் உந்தப்பட்டு, முந்தைய அமர்வில் 2% சரிவைத் தொடர்ந்து, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று நிலையாக இருந்தது.பிரெண்ட் கச்சா எண்ண... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.77 ஆக நிறைவு!

மும்பை: உள்ளூர் பங்குச் சந்தைகள் பலவீனமாகவும், வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையுடனும் இருந்ததால், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ர... மேலும் பார்க்க

ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: தொடர்ந்து 3வது நாளான இன்றும் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. இன்றயை வர்த்தகத்தில் ஐடி, ஆட்டோ மற்றும் எரிசக்தி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில... மேலும் பார்க்க

3-வது நாளாக சரிவில் பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும்(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,820.76 என்ற புள்ளிகளில் தொடங்கியது. நண்பகல் 12.3... மேலும் பார்க்க