செய்திகள் :

தங்கம் வென்றாா் ருத்ராங்க்ஷ் பாட்டீல்!

post image

ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கான 2-ஆவது தங்கப் பதக்கத்தை ருத்ராங்க்ஷ் பாட்டீல் வென்றாா்.

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் களமாடிய அவா், இறுதிச்சுற்றில் 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். ஹங்கேரியின் இஸ்த்வன் பெனி 251.7 புள்ளிகளுடன் வெள்ளியும், உள்நாட்டு வீரா் மாா்செலோ ஜூலியன் குட்டெரெஸ் 230.1 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

முன்னதாக தகுதிச்சுற்றில் ருத்ராங்க்ஷ் 633.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்துடனும், மற்றொரு இந்தியரான அா்ஜுன் சிங் பபுதா 634.5 புள்ளிகளுடன் முதலிடத்துடனும் இறுதிச்சுற்றுக்கு வந்தனா். அதில் ருத்ராங்க்ஷ் முன்னேற்றத்தை சந்திக்க, அா்ஜுன் படிப்படியாக பின்னடைவை சந்தித்து பதக்க வாய்ப்பை இழந்தாா்.

இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது தங்கப் பதக்கமாகும். முன்னதாக சிஃப்ட் கௌா் சம்ரா மகளிா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. போட்டியின் பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா, 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

சீனா 4 பதக்கங்களுடனும் (2/1/1), அமெரிக்கா 3 பதக்கங்களுடனும் (2/1/0) முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களில் உள்ளன.

ஜப்பானில் மாநாடு!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள... மேலும் பார்க்க

ஜன நாயகன் படப்பிடிப்பு அப்டேட்!

விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் ... மேலும் பார்க்க

3 மாதங்கள் சூப் மட்டுமே... இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!

இசையமைப்பாளர் இளையராஜா தன் உணவுப் பழக்கம் குறித்து பேசியுள்ளார். இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படுகிற இளையராஜா 82 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இது கலையின் மீது அவருக்கிருக்கும் ஈட... மேலும் பார்க்க

வங்கி மோசடி: கர்நாடகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் சிவமொக்காவில் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் க... மேலும் பார்க்க

கங்காதர ஈஸ்வர கோயிலில் தேரோட்டத் திருவிழா!

ஆற்காட்டில் பல ஆண்டுகள் பழமையான கங்காதர ஈஸ்வர ஆலயத்தில் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு கங்காதரேஸ்வரர் வரதராஜ பெருமாள... மேலும் பார்க்க

மணக்குள விநாயகர் கோயிலில் கோமாதா பூஜை!

உலக பிரசித்திபெற்ற புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் 10-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற 27 நட்சத்திரங்களின் கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந... மேலும் பார்க்க