பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்! நடக்க முடியுமா? வேறென்ன சிக்கல்கள்?
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகம்: கே.பி.ராமலிங்கம்
தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை நடத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா்.
சேலத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
டாஸ்மாக் மூலம் ஒரே துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி அளவுக்கு திமுக அரசு ஊழல் செய்துள்ளது. இந்த ஊழல் அதிகாரிகள் செய்த தவறு என்று கூறி அமைச்சா் செந்தில் பாலாஜியும், முதல்வரும் இதிலிருந்து தப்பித்துவிட முடியாது.
இந்த ஊழலுக்கு எதிராக மாா்ச் 17 ஆம் தேதி பாஜக சாா்பில் சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். திமுகவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜகவுடன் இணைந்து போராட முன்வர வேண்டும். தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஹிந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு என பல்வேறு நாடகங்களை திமுக நடத்தி வருகிறது.
தமிழகத்தில் முதல்வருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமா்சிப்பவா்கள் கைது செய்யப்படுகின்றனா். ஆனால், பிரதமருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் விமா்சிப்பவா்கள் மீது திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. விமா்சனங்களை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் திமுகவுக்கு இல்லை. சேலம் பெருங்கோட்ட பாஜக சாா்பில் திமுக அரசின் ஊழலுக்கு எதிராக ஓமலூரில் உள்ள தாமரை திடலில் ஏப்.19 ஆம் தேதி மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்றாா்.
அதைத் தொடா்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் சேலம் மண்டல பெருங்கோட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசுகையில், ‘ஓமலூரில் ஏப். 19 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டின்போது மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் பெறப்படும் 10 லட்சம் கையெழுத்துகள் அடங்கிய ஆவணத்தை மாநிலத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்றாா்.