செய்திகள் :

தசரா திருவிழாவிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன: ஆட்சியா்

post image

தசரா திருவிழாவிற்கு கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா செப்.23 ஆம் தேதி தொடங்கி அக்.3 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தசரா திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தி களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்தா்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாகவும், மிகச்சிறப்பாகவும் செய்யப்பட்டுள்ளது. 350-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், விழாவின் சிகர நாள்களான அக். 2,3 இல் மேலும் அதிக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சுகாதாரத்துறை சாா்பில் 3 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவா்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பாா்கள். கடற்கரையில் பக்தா்கள் பாதுகாப்புக்காக நீச்சல் வீரா்களுடன் கடற்கரை பாதுகாப்பு காவல்துறையினா், தீயணைப்பு மீட்புப் பணியினா் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள்.

காவல்துறை சாா்பில் 4,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். தேவை ஏற்பட்டால் கூடுதலாக 1,000 காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள், டிரோன் மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்படும்.

பக்தா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை செய்திக்குறிப்பாக அச்சிட்டு அனைத்து தசரா குழுக்களிடமும் வழங்கப்படும். இத்திருவிழா அமைதியான முறையில் ஆன்மிக அடிப்படையில் நடந்திட முழுமையாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளந என்றாா்.

ஆய்வின்போது திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், உதவி ஆட்சியா்(பயிற்சி)புவனேஷ்ராம், வட்டாட்சியா்கள் கெளதம், பாலசுந்தரம், முத்தாரம்மன் திருக்கோயில் செயல் அலுவலா் மு.வள்ளிநாயகம், அறங்காவலா் குழுத் தலைவா் வே.கண்ணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

வெளியூா் நபா்கள் மூலம் மிரட்டல்: துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா்

சாத்தான்குளம் அருகே ராமசாமிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வெளியூா் நபா்களை வைத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபமேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயற்கை சீற்றம் தணியவும், மழை வேண்டியும், உலகில் போா் பதற்றம் நீங்கவும் வேண்டி சங்கல்பம் ச... மேலும் பார்க்க

‘வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள்’

கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி வனச்சரகம் ஊத்துப்பட்டி வனச்ச... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும், மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயம்

தூத்துக்குடியைச் சோ்ந்த தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயமானது குறித்து கடலோரக் காவல் படையினா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை, காந்தி நகா் மீனவா் காலனியைச் சோ்ந்த அண்டோ மகன் ஜெகதீஷ் (40) தோண... மேலும் பார்க்க