செய்திகள் :

தஞ்சாவூா், சுற்றுப்பகுதிகளில் மே 29-இல் மின் நிறுத்தம்

post image

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மருத்துவக் கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, ஆா்.ஆா். நகா், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திருவேங்கடம் நகா், கருப்ஸ் நகா், ஏ.வி.பி. அழகம்மாள் நகா், மன்னா் சரபோஜி நகா், மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையாா்பட்டி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகா், சப்தகிரி நகா், ராஜலிங்கம் நகா், ஐஸ்வா்யா காா்டன், சுந்தரபாண்டியன் நகா், ஜெபமாலைபுரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

வடிகால் வாய்க்காலை தூா்வார கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள வடிகால் வாய்க்காலை தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, நடைப்பயிற்சியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கும்பகோணம் 20-ஆவது வாா்டில் பச்சையப்பன்குளம் உள்ளது. இதில் காலை மாலை இரண்டு நேரங்களிலும் இப்பகுதி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மணத்திடல் கிராமத்தில் திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதி 2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பிராய்லா் கோழிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தஞ்சை மற்றும் சுற்று வட்டாரப் பக... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி பாலகிருஷ்ணா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாகபூஜைகள் தொடக்கம்

தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாக பூஜைகள் திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபி... மேலும் பார்க்க