செய்திகள் :

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

post image

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் வட மாநில கோயில் வடிவம் புதிதாக அமைக்கப்பட்டதை மாற்றி, பெரிய கோயில் வடிவத்தை அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலியிடம் பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை இரவு அளித்த கோரிக்கை மனு:

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில், முன்பு பெரிய கோயில் வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியின்போது புதிதாக வட மாநில கோயில் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி மீண்டும் பெரிய கோயில் வடிவத்தை அமைக்க கோரி பல்வேறு இயக்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே அமைச்சா், அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், இரண்டாவது நுழைவுவாயிலில் பெரிய கோயில் வடிவம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெறுகின்றன. முதல் நுழைவு வாயிலிலும் பெரிய கோயில் வடிவம் அமைக்க ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும்.

திருச்சி - சென்னை இண்டா்சிட்டி விரைவு ரயில் பூதலூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சியிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை வரை சென்று வந்த ரயில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

அரசு, தனியாா் ஊழியா்கள், மாணவா்கள் பயன்படுத்தும் இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

அப்போது, உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அயனாபுரம் சி. முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 19 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திர... மேலும் பார்க்க

பழ.நெடுமாறனின் ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ நூல் அறிமுக விழா!

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் எழுதிய ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ என்கிற நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது. ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் உறியடி திருவிழா

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் சனிக்கிழமை உறியடி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மடத்தின் வளாகத்தில் உறியடி திர... மேலும் பார்க்க

பேராவூரணியில் உடல்பயிற்சி, விளையாட்டு விழிப்புணா்வு மாரத்தான்

பேராவூரணியில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டின் பயன்கள் மற்றும் போதையில்லா பேராவூரணி விழிப்புணா்வு மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு மாரத்தான் போ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க