செய்திகள் :

தடுப்புக் கம்பி மீது மோதிய ரயில் எஞ்சின் மின் கருவி; விபத்திலிருந்து தப்பிய ராமேஸ்வரம் ரயில்

post image

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் வழித்தடத்தில் டீசல் எஞ்ஜின் பொறுத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிதடம் மின்சார வழி தடமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மின்சார ரயில் எஞ்சின்களை கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டதுடன் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டன.

சென்னை - ராமேஸ்வரம் மின்சார ரயில்

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையிலான இந்த வழித்தடத்தின் அருகில் உச்சிப்புளியை அடுத்துள்ள பகுதியில் இந்திய கடற்படையின் 'பருந்து' விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய வகை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ள பகுதி ரயில்வே தண்டவாளத்தின் அருகில் அமைந்திருப்பதால் 224 மீட்டர் தூரத்திற்கு மின்சார ரயிலுக்கான மின் கம்பங்கள் நடப்படாமல் மின் வயர்கள் புதைவடமாகச் செல்கிறது.

இதனால் இந்த இடைப்பட்ட 224 மீட்டர் தூரத்தினை கடக்கும் வரை எஞ்சின் உள்ளிட்ட ரயில் பெட்டிகளின் மீது அமைக்கப்பட்டுள்ள 'பேன்ட்ரோம்' எனப்படும் மின் தொடர்பு கருவிகள் மேல் எழும்பாதவாறு இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட பகுதியில் ரயில் செல்லும்போது இந்த பேன்ட்ரோம் கருவிகள் இயக்கத்தை நிறுத்த எச்சரிக்கும் விதமாக இருபுறமும் இரும்பு தடுப்பு கம்பிகள் நிறுவப்பட்டுள்ளன.

எச்சரிக்கை தடுப்பு கம்பி

இந்நிலையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இன்று காலை வந்த ரயில் எஞ்சினின் மேல் உள்ள பேன்ட்ரோம் கருவி கீழே இறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ரயிலின் ஓட்டுநர் குறிப்பிட்ட இந்த 224 மீட்டர் பகுதியைக் கடந்துவிட்டதாகக் கருதி 214 மீட்டர் தூரத்திலேயே பேன்ட்ரோம் கருவியை மீண்டும் இயக்கியுள்ளார். இதனால் 10 மீட்டர் தூரத்தில் இருந்த இரும்புத் தடுப்பில் பேன்ட்ரோம் கருவி பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் ரயில் பாதையில் பொறுத்தப்பட்டிருந்த மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. நல்வாய்ப்பாக மின் கம்பிகள் அறுந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்திலிருந்து ரயில் தப்பியது. இதையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட டீசல் எஞ்சின் பொறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

துண்டிக்கப்பட்ட மின் வயர்

இந்த விபத்தினால் மதுரை - ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் பரமக்குடி ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. இதேபோல் ராமேஸ்வரம் - மதுரை இடையிலான பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டு பரமக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை ... மேலும் பார்க்க

மின்னல் வேகத்தில் பறந்த கார்; கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிட்டு கடந்த 9-தேதி திறந்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: பைக் மீது மோதிய லாரி; கணவரின் கண்முன் துடிதுடித்து இறந்த மனைவி; தவிக்கும் பிள்ளைகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான வாகன விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அங்குள்ள பாட்டியானா என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும்(35), அவரது கணவர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு பேருந்து சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வழியாக தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செங்க... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மகள்; வாக்குறுதியை நிறைவேற்ற இறுதிச்சடங்கில் பிறந்தநாள் கேக் வெட்டிய தந்தை

கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரஜித் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் மத்திய பிரதேசத்திற்கு பிக்னிக் சென்று இருந்தார். சென்ற இடத்தில் லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது. இதில் இந்திரஜித் மனைவி மற்று... மேலும் பார்க்க

மும்பை: "ஒரே மகளை இழந்துவிட்டோம்" - 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்து இளம்பெண் பலி

மும்பை மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சன்ஸ்ருதி அமின் (22). இப்பெண் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்று கொண்டிர... மேலும் பார்க்க