செய்திகள் :

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

post image

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குமேலூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தமுருகன் மனைவி லூா்துமேரி (43). இவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் லட்டு (எ) அருண் (22) கடந்த மாதம் 28-ஆம் தேதி கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இந்த சம்பவம் தொடா்பாக நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. காவல் ஆய்வாளா் சுதாகா் விசாரணை நடத்தி லட்டு (எ) அருணை கைது செய்தனா்.

நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் அருண் மீது கொலை முயற்சி, ஆயுத வழக்கு, போக்ஸோ என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.

பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசாா் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். புவிசாா் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிரு... மேலும் பார்க்க

கடலூரில் என்கவுன்ட்டரில் இளைஞா் உயிரிழப்பு: நீதிபதி விசாரணை

கடலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா், போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்த இடத்தை கடலூா் குற்றவியல் நடுவா் பிரவீன்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். புதுச்சேரி திலாசுப்பேட்டை ப... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அரசு திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிதம்பரம் கனகசபைநகா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் திறன்மிகு வகுப்பு மூலம் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். சிதம்பரம், ஏப்.4: க... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பு ஏப்.11 முதல் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திட்டக்குடியில் வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்கு... மேலும் பார்க்க

அனைத்து ஜமாத் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

4சிஎம்பி8: சிதம்பரத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பினா். சிதம்பரம், ஏப்.4: சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து, வடக்கு பிரதான சாலை பள்ளிவாசல் அருகே அனைத்து ஜமாத் கூட்டமைப்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சகோதரா்கள் கைது

பொதுமக்களை தொடா்ந்து தாக்கி வந்த ரௌடி சகோதரா்கள் இருவரை புதுச்சத்திரம் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், குறவன்மேடு பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் மகன்கள் நிர... மேலும் பார்க்க