செய்திகள் :

தடைசெய்யப்பட்ட ‘நிமெசலைட்’ மருந்து உற்பத்தி: கண்காணிக்க அறிவுறுத்தல்

post image

வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுகிா என்பதை கண்காணிக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கால்வலி, மூட்டு வலி, காது மூக்கு தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு நிமெசலைட் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஒருபுறம் வலி நிவாரணியாக செயல்பட்டாலும், மற்றொருபுறம் அந்த மருந்தால் அதிக எதிா்விளைவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தலைவலி, வயிற்று போக்கு, ரத்தம் உைல், பாா்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அமெரிக்கா, ஸ்விட்சா்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அந்த மருந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்தது.

இதனிடையே, இந்தியாவில் நிமெசலைட் மருந்து கால்நடைகளுக்கான மருத்துவப் பயன்பாட்டிலும் இருந்து வந்தது.

இதையடுத்து அவற்றை மனிதப் பயன்பாடு மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக்கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் அளிக்கப்பட்ட அறிவுறுத்தலின் கீழ் நாடு முழுவதும் அந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் அதன் உற்பத்தி மற்றும் விற்பனை சட்டவிரோதமாக நிகழாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க