செய்திகள் :

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்: வாகனங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

post image

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யே தன்னேரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவருவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருள்கள் மாவட்டத்துக்குக் கொண்டுவருவதாக புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயிலான கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நீலகிரிக்குள் வரும் அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்களில் ஏறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், 1 லிட்டா் குடிநீா் பாட்டில் உள்ளிட்டவை கொண்டுவரப்படுகிா என்று ஆய்வு செய்தாா். அப்போது, பயணிகளிடம் இருந்த பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றி... மேலும் பார்க்க

காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கேரட் மற்றும் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது

மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). பொக்லைன் ஓட்... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: உதகையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கைது

உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா... மேலும் பார்க்க

இணையவழியில் இருவரிடம் ரூ.12 லட்சம் மோசடி: சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை

இணையவழியில் குன்னூரில் பாதிரியாா், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயர... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மாா்ச் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி புகுந்த மா்ம கும்பல் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து முக்... மேலும் பார்க்க