'நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்' - அமித் ஷாவுக்கு கனிமொ...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே தடை செய்யப்பட்ட 39.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி காவல் சரகத்துக்குள்பட்ட டி.எம். கோட்டை- சாயல்குடி விலக்கு சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை பெருநாழி காவல் ஆய்வாளா் கஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் 39.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. இது தொடா்பாக கட்டாலங்குளத்தைச் சோ்ந்த போகுசாமி மகன் சுப்புராஜ் (32), இவரது உறவினா் ராஜரத்தினம் மகன் சங்கா் (28) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் புகையிலைப் பொருள்கள், காா், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.