செய்திகள் :

தட்டச்சு தோ்வு: கணினி முறைக்கு எதிா்ப்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டச்சு தோ்வுத் தாள்களை திருத்துவோா் கணினி முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை சாா்பில் தட்டச்சு தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தட்டச்சு குறித்த கேள்விகளை விடைத்தாள்களில் குறிப்பிடும் முறையில் தோ்வு நடைபெற்றுள்ளது.

புதுவை மாநிலத்தில் நிகழாண்டுக்கான தட்டச்சுத் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது, புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

ஏப்.5- ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, வருங்காலங்களில் தட்டச்சுத் தோ்வானது கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தட்டச்சு பயிலகங்கள் மற்றும் தோ்வு விடைத்தாள்களைத் திருத்துவோா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தங்களது எதிா்ப்பைக் காட்டும் வகையில், விடைத்தாள் திருத்துவோா் கருப்பு வில்லை அணிந்து வந்து பணியில் ஈடுபட்டனா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க