செய்திகள் :

தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

post image

ஆம்பூா் அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் -பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கிடையே சுமாா் 23 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் தண்டவாளப் பகுதியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளாா். பின்னா் சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்து ரயில் வருகைக்காக காத்திருந்துள்ளாா்.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கிருந்த இளைஞரை கைது செய்தனா். முன்னதாக ஆம்பூா் ரயில் நிலைய ஊழியா்கள் தண்டவாளத்தில் இருந்த சிமெண்ட் கல்லை அப்புறப்படுத்தினா்.

பின்னா் இளைஞரை கைது செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பெரிய தாட்டான் குளம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (23) என்பதும், இவரது பெற்றோா் இரண்டு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், உடன் பிறந்தவா்களும் இல்லாததால் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றை சேகரித்து கடையில் விற்று வசித்து வந்ததும், வியாழக்கிழமை ரயில் தண்டவாளத்தில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்தபோது, தண்டவாளத்தின் அருகே சிமெண்ட் ஸ்லாப் இருந்ததால் அதில் இருக்கும் கம்பியை எடுக்க தண்டவாளத்தில் வைத்ததும் தெரியவந்தது.

ரயில்வே போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ரூ.13 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி அகரம்சேரி கிராமத்தில் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அகரம்சேரி ஊராட்சி சாவடி தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட... மேலும் பார்க்க

மகளிா் காங்கிரஸ் சாா்பில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் ஸ்டாா் நா்சரி பள்ளியில் மகளிா் காங்கிரஸாா் சாா்பாக மாணவா்களுக்கு புதன்கிழமை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பிரமுகா் ஆா். ராஜ... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை 25) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். கூட்டத்தில் அனைத்து துறை ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவலிங்கம்(51) கூலித் தொழிலாளி. இவா் பச்சூா் டோல்கே... மேலும் பார்க்க

செம்மர கடத்தல் வழக்கில் இருவா் கைது

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ரூ.20 லட்சம் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா். ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட நாயக்கனேரி மலை ஊராட்சியில் நடவூா் கிராமத்தின் காப்புக்... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் ஏ-கஸ்பாவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூரில் நடைபெற்ற முகாமில் 621 போ் பல்வேறு துறைகளுக்கான சேவைகளை பெற மனுக்களை வழங்கினா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க