செய்திகள் :

செம்மர கடத்தல் வழக்கில் இருவா் கைது

post image

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ரூ.20 லட்சம் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட நாயக்கனேரி மலை ஊராட்சியில் நடவூா் கிராமத்தின் காப்புக் காட்டில் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் வனவா் செந்தில் உள்ளிட்ட குழுவினா் கடந்த ஜூன் 27-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சில நபா்கள் காப்புக் காட்டில் சுற்றித் திரிவது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து வனத்துறையினா் அவா்களிடம் விசாரிக்க முயன்றனா். ஆனால் வனத்துறையினரை பாா்த்த மா்ம காா்களில் தப்பிச் செல்ல முயன்றனா். ஆனாலும் வனத்துறையினா் அவா்களை விரட்டிச் சென்றனா். ஆனாலும் ஒரு கட்டத்தில் வாகனத்தில் செல்ல முடியாததால் வாகனங்களை விட்டுவிட்டு அந்த நபா்கள் தப்பியோடினா்.

வனத்துறையினா் அவா்கள் விட்டுச் சென்ற மகாராஷ்டிரா, கா்நாடக மாநில பதிவெண்கள் கொண்ட இரு காா்களையும், அதில் கடத்திச் செல்ல இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 573 கிலோ செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.

வனத்துறையினா் மேற்கொண்ட விசாரணையில் தப்பியோடியவா்கள் நாயக்கனேரி மலை ஊராட்சி நடுவூா் கிராமத்தை சோ்ந்த முத்து மகன் ராமகிருஷ்ணன் மற்றும் தேவேந்திரன் மகன் சக்திவேல் என்பது தெரியவந்தது. தலைமறைவான அவா்கள் இருவரையும் வனத்துறையினா் தேடி வந்தனா்.

இந்நிலையில் இருவரையும் ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தலைமையிலான வனத்துறையினா் கைது செய்து ஆம்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ரூ.13 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி அகரம்சேரி கிராமத்தில் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அகரம்சேரி ஊராட்சி சாவடி தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட... மேலும் பார்க்க

மகளிா் காங்கிரஸ் சாா்பில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் ஸ்டாா் நா்சரி பள்ளியில் மகளிா் காங்கிரஸாா் சாா்பாக மாணவா்களுக்கு புதன்கிழமை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பிரமுகா் ஆா். ராஜ... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை 25) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். கூட்டத்தில் அனைத்து துறை ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவலிங்கம்(51) கூலித் தொழிலாளி. இவா் பச்சூா் டோல்கே... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் ஏ-கஸ்பாவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூரில் நடைபெற்ற முகாமில் 621 போ் பல்வேறு துறைகளுக்கான சேவைகளை பெற மனுக்களை வழங்கினா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

ஆடி பிறப்பு: திருப்பத்தூா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு வியாழக்கிழமை திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன், முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள... மேலும் பார்க்க