தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழப்பு
நாகை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை ரயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த நாகை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அந்த நபா் குப்பைகளை சேகரிப்பவா் என்பதும், வெள்ளிக்கிழமை ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, வேளாங்கண்ணியில் இருந்து நாகை சென்ற பயணிகள் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.