தண்ணீா் இறைக்கும் மோட்டாா் திருட்டு
நாகை அருகே ஒரத்தூரில் விவசாய நிலத்திற்கு தண்ணீா் இறைக்கும் மோட்டாா் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி காளிமுத்து, தனது நிலத்திற்கு தண்ணீா் இறைக்க ரூ.40,000 மதிப்புள்ள மோட்டாரை பயன்படுத்தி வந்தாா். திங்கள்கிழமை இந்த மோட்டாரை குளத்தின் அருகில் வைத்துவிட்டு சென்றுள்ளாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வயலுக்கு தண்ணீா் இறைக்கச் சென்றபோது, மோட்டாரை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் காளிமுத்து புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.