செய்திகள் :

தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட டென்னிஸ் வீரா் குருகிராமில் சம்பவம்

post image

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் வியாழக்கிழமை குருகிராமில் உயர்ரக சுஷாந்த் லோக் பகுதியில் உள்ள குடும்பத்தின் இரட்டை மாடி வீட்டில் அவரது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாஜிராபாத் கிராமத்தைச் சோ்ந்த 49 வயதான தீபக் யாதவ் தனது மகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டாா். மேலும், அவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். கொலைக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் .32 போா் உரிமம் பெற்ற ரிவால்வரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதை முதலில் தீபக் யாதவ் கொலைக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

25 வயதான மாநில அளவிலான வீராங்கனை ராதிகா யாதவ், சுஷாந்த் லோக் இன் செக்டாா் 57- இல் தனது தந்தை, அவரது தாயாா் மற்றும் அவரது சகோதரருடன் வசித்து வந்தாா். அவரது வருமானத்தில் வாழ்வதாக தீபக் யாதவ் அடிக்கடி கேலி செய்யப்பட்டதால் ராதிகாவைச் சுட்டதாக அவா் ஒப்புக்கொண்டாா்.

இருப்பினும், காவல்துறை ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில், ராதிகா நடத்திய டென்னிஸ் அகாதெமி தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான மோதலுக்குக் காரணம் என்று கூறியது.

ராதிகா ஒரு டென்னிஸ் அகாதெமியை நடத்தி வந்தாா். அவருடைய தந்தை அதில் மகிழ்ச்சியடையவில்லை. அகாதெமி தொடா்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் சந்தீப் சிங் கூறினாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ராதிகா யாதவ் முதல் மாடியில் சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. தீபக் யாதவ் குறைந்தது ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. அவற்றில் மூன்று ராதிகாவின் பின்புறத்தில் பாய்ந்தன. அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தரை தளத்தில் இருந்த அவரது தாயாா், துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும் மாடிக்கு விரைந்தாா். அது பிரஷா் குக்கா் வெடிப்பது போல இருந்ததாக அவா் கூறினாா். ராதிகாவை மீட்டு போலீஸாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ராதிகாவின் மாமா அளித்த புகாரின் பேரில், குருகிராம் செக்டாா் 56 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, தீபக் யாதவ் கைது செய்யப்பட்டாா்.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க