செய்திகள் :

தந்தை இறந்ததால் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு கல்லூரியில் படிக்க உதவிய ஆட்சியர்!

post image

கோவை: தந்தை இறந்ததால் உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாா் க.கிரியப்பனவா் இரவு 7 மணிக்கு கல்லூரிக்கு அழைத்து கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணை வாங்கி கொடுத்து உதவிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன் தம்பதியினரின் மகள் நட்சத்திரா. கடந்த சில மாதங்கள் முன்பு நட்சத்திரா தந்தை நடராஜன் இறந்துவிட்டார்.

மகள் கல்லூரியில் படிப்பதற்கு சேர்க்கை ஆணை வாங்கி கொடுத்த ஆட்சியருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய் ஜெயந்தி மற்றும் மகள் நட்சத்திரா.

இந்நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் குடும்ப கஷ்டம் காரணமாக நடராஜனின் மனைவி ஜெயந்தி மற்றும் அவரது மகள் நட்சத்திரா அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழக்கமாக அந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற போது நடராஜன் குடும்பத்தை அழைத்து பேசியுள்ளார். பின்னர் நட்சத்திரா படிப்பதற்கு வசதி இல்லாமல் வேலைக்கு செல்லவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு இரவு 7 மணிக்கு அழைத்து நட்சத்திரா படிப்பதற்கு சேர்க்கையை ஆணை வாங்கி கொடுத்துள்ளார்.

இதில் மகிழ்ச்சி அடைந்த தாய் ஜெயந்தி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். பின்னர் நட்சத்திரா படிப்பு செலவு அனைத்தும் மாவட்ட ஆட்சியர் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை என்ற நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று ரத்து செய்துள்ளது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (... மேலும் பார்க்க

ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி: மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகளின் முதலீடு 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37,600 கோடியாக உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்த நிலையில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்... மேலும் பார்க்க