செய்திகள் :

தனியாக வசித்த நடிகை மர்ம மரணம்! உடலைப் பெற குடும்பத்தினர் மறுப்பது ஏன்?

post image

பாகிஸ்தானில் 2 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்த நடிகையின் உடலை, அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சின்ன திரை நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (வயது 32), கராச்சி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர், அந்நாட்டின் ஏராளமான சின்ன திரை நாடகங்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவரது வீட்டை காலி செய்ய காவல் துறையினர் சென்றபோது அங்கு ஹுமைராவின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இருப்பினும், ஹுமைராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சந்தேகப்படும்படியான எந்தவொரு தடயமும் கிடைக்காததினால், அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், ஹுமைரா மரணமடைந்து குறைந்தது 2 மாதங்களுக்கு மேலாகியிருக்கக் கூடும் எனக் கருதப்படும் நிலையில், அவர் இல்லாததை அக்கம்பக்கத்தினர் உள்பட யாரும் உணரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஹுமைராவின் உடல் ரசாயன கூராய்வு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் அவர்களைத் தொடர்புக்கொண்டனர்.

அப்போது, அவர்கள் அவரது உடலை உரிமைக்கோர மறுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஹுமைராவுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடலை சிந்து மாகாண அரசு முறையாக அடக்கம் செய்யும் என அம்மாகாணத்தின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜுல்ஃபிகார் ஷா தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த ஜூன் மாதம், கராச்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆயிஷா கான் (84) எனும் நடிகையின் உடல், அவர் இறந்து பல நாள்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, பாகிஸ்தானில் பொழுதுப்போக்குத் துறையில் பணியாற்றும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் தங்களது குடும்பத்தினராலும், சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு தனியாக தனிமையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆர்வலர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

It is reported that the family of the actress who died mysteriously two months ago in Pakistan has refused to bury her body.

இதையும் படிக்க: அண்டார்டிகாவில் எண்ணெய் வளம்! ரஷியா ஆராய்ச்சியால் சர்வதேச மோதல் நிகழுமா?

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க