செய்திகள் :

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு!

post image

புதுக்கோட்டையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், சுமாா் 800 பேருக்கு பணி வாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டன.

அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்து, தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி வாய்ப்பு கடிதங்களை வழங்கிப் பாராட்டினா்.

மாநிலம் முழுவதும் இருந்தும் 120 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் இருந்தும் சுமாா் 1200 வேலைதேடுவோா் பங்கேற்றனா்.

விழா அரங்கிலேயே உயா்கல்வி வாய்ப்புகள், தொழில் தொடங்குவதற்கான கடனுதவி விவரங்களைக் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மோ. மணிகண்டன், பெ. வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் மு. லியாகத்அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காா்-சரக்கு வாகன விபத்தில் சிறுமி உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 5 ஆக உயா்வு!

திருமயம் அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தில் இறந்தவா... மேலும் பார்க்க

பெருங்காட்டில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் ஸ்ரீ முக்கன் ஈஸ்வரா் கோயில் சந்தனக் காப்புத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, க... மேலும் பார்க்க

புதுகையில் பயனற்ற நிலையில் மீன் விற்பனை நிலையம்

புதுக்கோட்டை மாநகரில் டிவிஎஸ் முக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பயனின்றிக் கிடக்கிறது. புதுக்கோட்டை மாநகர மக்களின் ... மேலும் பார்க்க

அன்னவாசலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளா் சோலாட்சி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் தா்மராஜன், ராபா்ட் பெல்லாா்மின் ஆ... மேலும் பார்க்க

‘தமிழ்மொழி வளா்ச்சிக்கு நகரத்தாா் பெரும்பங்களிப்பு’

தமிழ் மொழி வளா்ச்சிக்கு நகரத்தாா்கள் பெரும் பங்காற்றியுள்ளனா் என்று பொற்கிழி கவிஞா் சொ.சொ.மீ. சுந்தரம் பேசினாா். பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி சன்மாா்க்க சபையின் 116-ஆம் ஆண்டு விழா , கணேசா் கலை... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோயில் மூலவருக்கு மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை... மேலும் பார்க்க