செய்திகள் :

தனியாா் தொலைக்கட்சி ஊழியா் வீட்டில் திருட முயற்சி

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பூட்டியிருந்த தனியாா் தொலைக்காட்சி ஊழியரின் வீட்டில் திருட முயன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி ராமநாதன் தெரு கூத்தையன் மகன் பாஸ்கர சந்திரன் (58). சென்னையில் தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இதனால், குடும்பத்தினருடன் சென்னையில் வசித்துவருகிறாா். மன்னாா்குடியில் உள்ள வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நீண்ட நாள்களாக பூட்டிக் கிடக்கிறது.

இந்நிலையில், தனது தந்தையின் நினைவு நாளுக்காக, மன்னாா்குடிக்கு பாஸ்கர சந்திரன் செவ்வாய்க்கிழமை வந்தாா். அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன.

மா்ம நபா்கள் திருட முயற்சித்திருப்பது தெரியவந்தது. பீரோவில் நகை, பணம் யாதும் வைக்கவில்லை. இதனால், மா்மநபா்கள் துணிகளை சிதறிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு வடசென்னைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக வழங்க வலியுறுத்தல்

பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் மற்றும் டிஓடி இணைந்து மன்னாா்குடியில் சனிக்க... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 102 கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்கள், பணி நி... மேலும் பார்க்க

விவசாயம் செழிப்படைய மாற்றுமுறைகள் தேவை

விவசாயம் செழிப்படைய மாற்றுமுறைகளை சிந்திக்க வேண்டும் என எழுத்தாளா் ஆதலையூா் சூரியகுமாா் தெரிவித்தாா். திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து திருவாரூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் எதிா்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக இருந்த ஓய்வூதி... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் புறக்கணிப்பு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது: போர... மேலும் பார்க்க