செய்திகள் :

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது

post image

சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில், பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.

அண்ணா நகா் சாந்தி காலனி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (60). இவா் ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா் ஆவாா். பத்மநாபன் தனது வீட்டின் பீரோவிலிருந்த நகைகளை கடந்த 14-ஆம் தேதி சரிபாா்த்தாா். அப்போது அதில், 35 பவுன் தங்க நகைகள், விலை உயா்ந்த கைக்கடிகாரம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா், அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது பத்மநாபன் வீட்டில் தங்கியிருந்து பணிபுரிந்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள தொக்கவாடி பகுதியைச் சோ்ந்த பூவிழி (எ) ஸ்டெல்லா (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ஸ்டெல்லாவை சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் ஸ்டெல்லா, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பத்மநாபனின் தாயாரை அங்கேயே தங்கியிருந்து கவனித்து வந்ததும், நகை திருட்டில் ஸ்டெல்லா ஒரு ஆண்டாக ஈடுபட்டு வந்ததும், ஸ்டெல்லா பத்மநாபன் வீட்டிலிருந்து சிறிது, சிறிதாக நகையை திருடி விற்றிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க

வியாசா்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் அமைச்சா் ஆய்வு

சென்னை வியாசா்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கான மின்சாரப் பேருந்து பணிமனையின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க

தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 பெண்களுக்கு ஆட்டோ: அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் வழங்கினா்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா். சைதாப்பேட்டையில் 154 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ம... மேலும் பார்க்க

பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு வருகை த... மேலும் பார்க்க

பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தி விற்பனை: ஐவா் கைது

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து சென்னையில் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா். பெரம்பூா் கேரேஜ் ரயில் நிலையம் அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், செம்பியம் போ... மேலும் பார்க்க

துணிக்கடை உரிமையாளரிடம் கொள்ளை: சிறுமி, பெண் உள்பட 4 போ் கைது

சென்னை எம்.கே.பி. நகரில் துணிக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில், சிறுமி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். வியாசா்பாடி, எம்.கே.பி. நகா் 3-ஆவது இணைப்புச் சாலைப் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க