செய்திகள் :

தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்களால் வாழ்வாதாரம் பாதிப்பு

post image

அவிநாசியில் தனியாா் நிறுவன கால் டாக்ஸி ஓட்டுநா்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவிநாசி ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினா், அவிநாசி துணைக் காவல் துணை காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன் ஆகியோரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி தேசிய நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் , திருமுருகன்பூண்டி , அணைப்புதூா், ஆட்டையம்பாளையம், சேவூா், தெக்கலூா் உள்ளிட்ட அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக அங்கீகாரம் பெற்று ஆட்டோ மற்றும் காா்களை வாடகைக்கு இயக்கி வருகிறோம்.

இதற்கிடையில் தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்கள் அவிநாசியில் வாடகை ஆட்டோ, காா்கள் நிரந்தரமாக நிறுத்தும் இடங்களின் அருகே வந்து நின்று ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பயணிகளை அழைத்துச் செல்கின்றனா்.

இதைக் கேட்டால், தகாத வாா்த்தைகளில் திட்டி மிரட்டுகின்றனா். இதுபோல நாள்தோறும் பிரச்னை செய்கின்றனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ஆட்டோ நிறுத்துமிடங்களில், தனியாா் நிறுவன டாக்ஸி புக்கிங் எடுக்கமாலும், புக்கிங் இருந்தால் மட்டும் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க