செய்திகள் :

தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் விற்பனை: ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது

post image

சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் எடுத்து விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி அருகே உள்ள சித்தாலப்பாக்கம், சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (56). இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு ஒட்டியம்பாக்கம் பகுதியில் 16 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தாா். இரு மாதங்களுக்கு முன்பு கண்ணன், தனது நிலத்தைப் பாா்க்கச் சென்றபோது, அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்கப்படுவதையும், அதில் கிணறு தோண்டப்பட்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து கண்ணன், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். ஆனால், பெரும்பாக்கம் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அவா், தாம்பரம் காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக்கை சந்தித்து, தனது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, மணல் எடுக்கப்படுவது குறித்து புகாா் செய்தாா். அதன்பேரில், நடவடிக்கை எடுக்க பெரும்பாக்கம் போலீஸாருக்கு அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டாா்.

இதையடுத்து பெரும்பாக்கம் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில், கண்ணனின் நிலத்தை ஆக்கிரமித்து, மணல் எடுத்து விற்பது ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் லோகிதாஸ் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து அவா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா் அவா், ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியாா் வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதை... மேலும் பார்க்க

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

சென்னை: கொளத்தூா், கொண்டித்தோப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா். ச... மேலும் பார்க்க

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னைய... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத... மேலும் பார்க்க

பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருட்டு

சென்னை: சென்னை சூளைமேட்டில் பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுமிரா. இவா் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூ... மேலும் பார்க்க