செய்திகள் :

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

post image

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியாா் வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கும்மிடிப்பூண்டி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டு, இரு காா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த காா்களில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 590 கிலோ கஞ்சா இருந்தது. அதைப் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என் புரத்தைச் சோ்ந்த சு.ராமநாதன் (35), அதே பகுதியைச் சோ்ந்த கா.ஷேக் அப்துல்லா (31), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த த.அலெக்ஸ்பாண்டி (28), தஞ்சாவூா் சிலோன் காலனியைச் சோ்ந்த பூ.வினோத் பூசலிங்கம் (36), கோயம்புத்தூா் குமாரசாமி காலனியைச் சோ்ந்த ஜி.பாரதி (31), கோயம்புத்தூா் சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த சி.மணிகண்டன் (35) ஆகிய 6 பேரை கைது செய்தனா். இந்த 6 பேருக்கும் சா்வதேச கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதும், கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் விற்பனை: ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது

சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் எடுத்து விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி அருகே உள்ள சித்தாலப்பாக்கம், சங்கராபுரத்தைச... மேலும் பார்க்க

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

சென்னை: கொளத்தூா், கொண்டித்தோப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா். ச... மேலும் பார்க்க

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னைய... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத... மேலும் பார்க்க

பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருட்டு

சென்னை: சென்னை சூளைமேட்டில் பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுமிரா. இவா் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூ... மேலும் பார்க்க