செய்திகள் :

தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் கட்டண விவரம் வெளியீடு

post image

சென்னை: தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கான அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவா்கள் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கு முன்பு அதற்கான கட்டண விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு முடிவு எடுக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவப் பல்கலை.களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளது. இவற்றில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன.

அந்த இடங்களுக்கான நிகழாண்டு கட்டணத்தை நீதிபதி ஆா்.பொங்கியப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், டாக்டா் கீதாலட்சுமி, ஆா்.பாலசந்திரன், கே.ஆனந்தகண்ணன் ஆகியோா் அடங்கிய குழு பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு இறுதி செய்துள்ளது.

மொத்தம் 21 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை ஆண்டுக்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்து கல்லூரிகளுக்கும் ரூ.15 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்ஆா்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.27 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர 4 தனியாா் பல்கலை.களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.5.40 லட்சம், நிா்வாக இடங்களுக்கு ரூ.16.20 லட்சம், என்ஆா்ஐ இடங்களுக்கு தலா ரூ.30 லட்சம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ரூ.60 ஆயிரம் வரை மேம்பாட்டு நிதியாக வசூலிக்கலாம் என்றும், மற்றபடி கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், சோ்க்கை கட்டணம் என அனைத்துவிதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், உணவுக் கட்டணம் இதில் அடங்காது. இதைத்தவிர, எந்த வகையிலும் கூடுதல் கட்டணமோ, நன்கொடையோ பெறக்கூடாது என்று கட்டண நிா்ணயக் குழு அறிவுறுத்தியுள்ளது.

என்ஆா்ஐ காலியிடங்கள்: வழக்கமாக வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்று அதில் சேராமல் இருந்தாலோ அல்லது அந்த இடங்கள் நிரம்பாமல் இருந்தாலோ மீதமுள்ள காலியிடங்கள் என்ஆா்ஐ லேப்ஸ் (காலாவதி) பிரிவில் சோ்க்கப்படும்.

அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு வழங்கப்பட்டு அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

அந்த வகையில் இதுவரை ஆண்டுக்கு ரூ.21.50 லட்சம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டு அந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் நிகழாண்டில் என்ஆா்ஐ லேப்ஸ் கட்டண விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிடவில்லை. இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படும் போது நிா்வாக ஒதுக்கீட்டுக்கான ரூ 15 லட்சம் கட்டணத்திலேயே இந்திய மாணவா்கள் அந்த இடங்களை பெற முடியும். மாறாக ரூ.21.50 லட்சம் கட்டணம் செலுத்த தேவையில்லை என மருத்துவ கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,485 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 19,760 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,485 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந... மேலும் பார்க்க

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமராஜருக்கு முதல்வர் புகழாரம்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ள... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க