செய்திகள் :

தன் மீதான வன்முறை வழக்கை ரத்த செய்யக்கோரி ஹன்சிகா மனு!

post image

நடிகை ஹன்சிகா குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை 2022-ல் ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாள்களுக்குள் அவருடைய  சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி விண்ணப்பம் அளித்தார்.

பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மோனா மோத்வானி இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்தவதாகவும் கணவருடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தும் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என முஸ்கான் மும்பை அம்பாலி காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர், ஹன்சிகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

பின், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஹன்சிகா மற்றும் அவரது தாயாருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், முஸ்கான் நான்சி தொடுத்த வழக்கு எந்த ஆதரங்களும் அற்ற உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்த குடும்ப வன்முறை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என ஹன்சிகா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் ஜூலை 3 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிக்க: ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது? செல்வராகவன் பதில்!

தனுஷ் குரலில் ‘ரெட்ட தல’ பாடல்!

நடிகர் அருண் விஜய் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வணங்கான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.தொடர்ந்து, அ... மேலும் பார்க்க

கோலாகலமாக நடந்தேறிய தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்!

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தேறியது. பிரசித்தி பெற்ற பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடை... மேலும் பார்க்க

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா!

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் ... மேலும் பார்க்க

‘இந்த வரலாறு தொடர்கிறது...’ கிண்டலுக்கு ஆளான எஸ். வி. சேகர்!

நடிகர் எஸ். வி. சேகர் பதிவைப் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் திரைப்படம் கடந்த ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்... மேலும் பார்க்க