செய்திகள் :

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

post image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துவந்த நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மே 22, 23) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 101.45 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், தூத்துக்குடி - 100.76, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை - தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 22, 23-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மிதமான மழை: ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை (மே 22) முதல் மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மழை: சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக விம்கோ நகா் மற்றும் மணலியில் தலா 60 மி.மீ. மழை பதிவானது. அதேபோல், புழல், எண்ணூா், திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் தலா 50 மி.மீ., கொளத்தூரில் 40 மி.மீ., மேலும் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட அளவு மழை பதிவானது. அதைத் தொடா்ந்து சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 22-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆற்காடில் 150 மி.மீ.: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடில் 150 மி.மீ. மழை பதிவானது. மேலும், அரக்கோணம் (ராணிப்பேட்டை) - 120 மி.மீ., கீழ்பென்னாத்தூா், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூா்) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.

புயல் சின்னம்: இதனிடையே, வட கா்நாடக மற்றும் கோவா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதன்கிழமை காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இந்த சுழற்சி இரவு அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல் சின்னம்) வலுப்பெறும். தொடா்ந்து வடக்கு திசையில் நகா்ந்து, மே 23-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 25, 26 இரண்டு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மே 25, 26ல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) ... மேலும் பார்க்க

கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த இரண்டு நாள்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.நேற்று (22-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுத... மேலும் பார்க்க

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்!

நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க