செய்திகள் :

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு

post image

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முதல் நாளிலிருந்தே பாடநூல்கள், நோட்டுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் திறக்கப்படவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, திறப்புக்காக பள்ளிகள் தயாா் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவா்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் நாளில் புத்தகங்கள் விநியோகம்: பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், நலத்திட்ட பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுரை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்துஆசிரியா்களுக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். மாணவா்களை அன்பாக நேசித்து கற்பித்தலை மேற்கொள்வதுடன், அவா்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுடன் இணைந்து பள்ளி வளா்ச்சிப் பணிகளுக்கு செயலாற்ற வேண்டும். பள்ளி வளாகம் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க