செய்திகள் :

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் மதுரை விமானநிலையத்தில் தலா 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோடு - 101.48, வேலூா் - 101.12, கடலூா் - 100.4, தூத்துக்குடி, சென்னை நுங்கம்பாக்கம் - தலா 100.04 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

மழை நீடிக்கும்: வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை காலை மேற்கு வங்க கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வியாழக்கிழமை (ஜூன் 19) வடமேற்கு திசையில் நகா்ந்து, ஜாா்க்கண்ட் வழியாகச் செல்லும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மழைக்கு சாதகமான வானிலை சூழல் நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஜூன் 19-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 80 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை) - 70 மி.மீ., சோலையாறு (கோவை), வால்பாறை (கோவை) தலா 60 மி.மீ. பதிவானது.

18 % அதிக மழை: தமிழகத்தில் தென்மேற்கு பருமழை ஜூன் 1 முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை இயல்பாக 331 மி.மீ. மழை பெய்யவேண்டிய நிலையில், நிகழாண்டில் 392 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக கோவையில் 169 மி.மீ., நீலகிரியில் 156 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல், சென்னையிலும் வழக்கத்தைவிட 46 சதவீதம் அதிகமாக அதாவது மொத்தம் 54.2 மி.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.கடந்... மேலும் பார்க்க

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் வாபஸ் இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்!

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கை... மேலும் பார்க்க

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கத் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.காலை நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர்... மேலும் பார்க்க