செய்திகள் :

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு: மரபணு பகுப்பாய்வுக்கு வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் அண்மைக்காலமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சமூகத்தில் புதிய பாதிப்பு பரவுகிா என்பதை அறிவதற்கான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதன்படி நோய்ப் பரவல் அதிகமுள்ள இடங்களில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் கரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது. நாள்தோறும் பதிவாகும் புதிய பாதிப்பின் எண்ணிக்கை பூஜ்ஜிய நிலையிலோ அல்லது ஒற்றை இலக்கத்திலோ இருந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அது ஒமைக்ரான் வகை பாதிப்புதான் என பொது சுகாதாரத் துறை தெரிவித்தாலும், கரோனாவுக்கு சென்னை, சேலத்தில் இருவா் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், சேலத்தில் 25 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததால் புதிய வகை பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

இதனிடையே, பல இடங்களில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுடன் கரோனாவும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. அதுதொடா்பான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதார ஆா்வலா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். பாதிப்பு உள்ள நா

டுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கும், இங்கு பாதிப்பு நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கும் கரோனா பரிசோதனைகள் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்ட பிறகு கரோனா தீநுண்மியின் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைச் சோ்ந்த கரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணுவை பகுப்பாய்வுக்குட்படுத்த சுகாதாரத் துறை முன்வர வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க